திருப்பி தரலனா போராட்டம் தான்…!! பிடிவாதம் பிடிக்கும் அரசு ஊழியர்கள்…. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்…!!

By Devi Ramu on தை 9, 2026

Spread the love

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது அரசு அறிவித்துள்ள ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ போதுமானதாக இல்லை என்றும், இதில் ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

குறிப்பாக, மாத ஊதியத்தில் 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்படுவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஓய்வு பெறும்போது வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தலைமைச் செயலகச் சங்கம் முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

   

இந்த விவகாரத்தில் அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள ஆசிரியர் கழகங்கள், கடந்த 20 ஆண்டுகளாகத் தங்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் வரையிலான தொகையை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

   

அவ்வாறு செய்யத் தவறினால் மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.