சென்னை மாநகராட்சியில் செயல்படும் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், 309 காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், தரவு உள்ளீட்டாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எனப் பல்வேறு பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
10-ம் வகுப்புத் தேர்ச்சி முதல் எம்பிபிஎஸ் (MBBS) வரை கல்வித் தகுதியுடையவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பதவிக்கேற்ப மாதம் 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 90,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு கிடையாது; நேர்முகத் தேர்வு மூலமாகவே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பொதுச் சுகாதாரத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 05.01.2026 கடைசித் தேதியாகும். சென்னை மாநகராட்சிப் பகுதியில் அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…