2026 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2 முதல் 4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு ஊசலாடும் 20 தொகுதிகளை முதல்வர் ஸ்டாலின் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். இந்தத் தொகுதிகளில் ஒரு சிறு தவறு நடந்தாலும் வெற்றி கைநழுவிவிடும் என்பதால், அவர் ஒரு நாளில் 20 மணிநேரத்தை இதற்காகவே அர்ப்பணித்துச் சூறாவளியாகச் செயல்பட்டு வருகிறார். அறிவாலய வட்டாரங்கள் வியக்கும் வகையில், ஒரு நவீன கணினியைப் போல ஒவ்வொரு தொகுதியின் கள நிலவரத்தையும் அவர் மிகத் துல்லியமாக ஆராய்ந்து வருகிறார்.
முக்கியப் பொறுப்பாளர்களைத் தாண்டி, அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகளிடம் நேரடியாகப் பேசி உற்சாகம் அளிக்கும் புதிய யுத்தியை அவர் கையாண்டு வருகிறார். தனது ஐபேடில் உள்ள தரவுகளைக் கொண்டு, பின்னடைவு உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கிருக்கும் நிர்வாகிகளுக்குத் தனிப்பட்ட முறையில் போன் செய்து ஆலோசனைகளை வழங்குகிறார். மேடைப் பேச்சுகளைக் காட்டிலும், ‘மைக்ரோ மேனேஜ்மென்ட்’ மூலம் இந்த முக்கியமான தொகுதிகளைக் கைப்பற்ற அவர் காட்டும் வேகம் திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
