அதிமுக எம்பி சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை பத்து லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்தில் ரூ.10 லட்சம் அபராதத்தை சி.வி.சண்முகம், தமிழ்நாடு அரசுக்கு நேரடியாக செலுத்தவேண்டும் என்றும் நலத்திட்டங்களுக்கு இந்த தொகையை பயன்படுத்தலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
