இரண்டு மனைவிகள், 16 குழந்தைகள்..! “அரசு உதவி தேவையில்லை, உழைத்து வாழ்வோம்” சவால் விடும் நபர்… இந்த காலத்துல இப்படியொரு மனுஷனா…?

By Soundarya on ஆனி 3, 2026

Spread the love

ஊடகவியலாளர் ஒருவர் இரண்டு மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளுடன் வசித்து வரும் நபர் ஒருவரை நேர்காணல் செய்துள்ளார். “உங்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா, அவர்கள் உங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?” என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, “ஆமாம், எனக்கு இரண்டு மனைவிகள். அவர்கள் என்னுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் உழைத்து அவர்கள் இருவரையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்; பிறகு ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்?” என்று அந்த நபர் மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். மேலும், தாங்கள் வெளியில் செல்லும்போது மக்கள் தங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்களே தவிர, யாரும் தவறாக எதுவும் சொல்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தங்களுக்கு இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பற்றிக் பகிர்ந்துகொண்ட அவர், ஒரு மனைவிக்கு எட்டு குழந்தைகள் வீதம், இரண்டு மனைவிகள் மூலம் தனக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய குடும்பத்தைக் கொண்ட உங்களுக்கு அரசிடமிருந்து ஏதேனும் சலுகைகளோ அல்லது உதவிகளோ கிடைக்கிறதா என்று செய்தியாளர் கேட்டபோது, தங்களுக்கு இதுவரை எந்தவொரு அரசு உதவியும் கிடைக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார். இத்தனை குழந்தைகளுக்குப் பிறகு அரசு உதவி கிடைத்திருக்க வேண்டுமே என்ற கேள்விக்கு, “அரசு உதவி கிடைக்காவிட்டாலும் எங்களுக்குப் பரவாயில்லை, நாங்கள் மொத்தம் 18 பேர் இருக்கிறோம், உழைத்து பிழைத்துக் கொள்வோம்” என்று உறுதியுடன் பதிலளித்துள்ளார்.

   

இறுதியாக, இவ்வளவு பெரிய குடும்பத்தை வழிநடத்துவது ஒரு சுமையாக இல்லையா என்று செய்தியாளர் வினவியபோது, அதை அவர் முற்றிலும் மறுத்தார். “இது எங்களுக்குச் சுமையே அல்ல. அதிக குழந்தைகள் இருந்தால் அதிக கைகள் என்று அர்த்தம். எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் எங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நாங்கள் கடினமாக உழைத்தால் மாதத்திற்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்” என்று அந்த நபர் சவாலுடன் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.