தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் விடுமுறை வருகின்றது. அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் மட்டுமே தொடர்ந்து பள்ளிகள் செயல்படும். அதனைத் தொடர்ந்து புதன்கிழமையான ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒரு நாள் அரசு விடுமுறையாகும். அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
