karthigai

திருகார்த்திகை அன்று வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்…? எந்த விளக்கு முக்கியமாக இடம் பெற வேண்டும்…?

By admin on மார்கழி 9, 2024

Spread the love

கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் தான் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருக்கார்த்திகை தீபம் ன்று வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்பர். இந்த வருடம் திருக்கார்த்திகை தீபம் வருகிற வெள்ளிக்கிழமை டிசம்பர் 13ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் எத்தனை விளக்குகள் நம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

திருக்கார்த்திகை என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மலை உச்சியில் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். திருக்கார்த்திகை அன்று மலையில் அண்ணாமலையாருக்கு மலை உச்சியில் தீபம் ற்றிய பிறகுதான் அனைவர் வீட்டிலும் விளக்கு ஏற்றும் வழக்கம் இருக்கிறது. திருக்கார்த்திகை அன்று நம் வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கும்போது நம் வீடே விளக்கு ஒளியில் ஜொலிக்கும் இதனால் நம் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது ஐதீகம்.

   

அதன்படி கார்த்திகை தீபத்தன்று நாம் ஏற்ற வேண்டிய விளக்குகளின் எண்ணிக்கை 27 ஆகும். நம் வீட்டில் 27 என்ற கணக்கில் விளக்குகளை ஏற்ற வேண்டும் முற்றத்தில் கோலம் போட்டு இருக்கும் இடத்தில் 5 விளக்குகள் திண்ணைகளில் நான்கு விளக்குகள் மாடக்குழியில் இரண்டு விளக்குகள் நிலையில் இரண்டு விளக்குகள் முற்றத்தில் நான்கு விளக்குகள் நடையில் இரண்டு விளக்குகள் என கணக்கில் நாம் விளக்குகளை ஏற்றும் போது நம் வீட்டில் லட்சுமி தேவி ஆனவள் வாசம் செய்வாள். இதனால் தீய சக்திகள் நம் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

 

அது மட்டுமல்லாமல் திருக்கார்த்திகை அன்று வெள்ளி பித்தளை போன்ற விளக்குகள் ஏற்றினாலும் கண்டிப்பாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை கட்டாயம் ஏற்ற வேண்டும். நம் வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது தனம் தானியம் செல்வம் நல்ல புத்தி படிப்பு தொழில் முன்னேற்றம் போன்றவற்றில் அதீத பலன்களை தருகிறது. அதனால் இந்த திருக்கார்த்திகை தீபத்தன்று 27 விளக்குகளை ஏற்றி இறைவனை மனதார வழிபட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.