#image_title
தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர்.
சிம்ரன் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது அவருடைய அழகிய நடனம் தான். இதனால் தான் இவரை இடுப்பழகி என்று கூறி வந்தார்கள். 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த விஐபி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார் .
சொல்லப்போனால் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை சிம்ரன். அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சிறந்த நடிகை, சிறந்த துணை, நடிகை சிறந்த வில்லி என்று ஏராளமான விருதுகளை பெற்றிருக்கின்றார். கடந்து 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம்.
இரண்டு ஆண் குழந்தைகளும் பெற்ற பின்பு குழந்தைகள், குடும்பம் என்று செட்டிலாகி இருந்த சிம்ரன் நடிப்புக்கு பிரேக் கொடுத்து இருந்தார். அதன் பின்னர் தொலைக்காட்சி ஷோகளில் நடுவராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அதிலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும், சீம ராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார்.
சமீபத்தில் வெளியான அரண்மனை 4 நிகழ்ச்சியில் குஷ்பு உடன் சேர்ந்து இவர் ஆடிய நடனம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சிம்ரன் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் பார்ப்பதற்கு சிம்ரன் போலவே இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் அவாரி, அவரது மனைவி…