#image_title
தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும் பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர்.
சிம்ரன் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது அவருடைய அழகிய நடனம் தான். இதனால் தான் இவரை இடுப்பழகி என்று கூறி வந்தார்கள். 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த விஐபி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார் .
சொல்லப்போனால் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை சிம்ரன். அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சிறந்த நடிகை, சிறந்த துணை, நடிகை சிறந்த வில்லி என்று ஏராளமான விருதுகளை பெற்றிருக்கின்றார். கடந்து 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம்.
இரண்டு ஆண் குழந்தைகளும் பெற்ற பின்பு குழந்தைகள், குடும்பம் என்று செட்டிலாகி இருந்த சிம்ரன் நடிப்புக்கு பிரேக் கொடுத்து இருந்தார். அதன் பின்னர் தொலைக்காட்சி ஷோகளில் நடுவராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அதிலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும், சீம ராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார்.
சமீபத்தில் வெளியான அரண்மனை 4 நிகழ்ச்சியில் குஷ்பு உடன் சேர்ந்து இவர் ஆடிய நடனம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சிம்ரன் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் பார்ப்பதற்கு சிம்ரன் போலவே இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…