பழம்பெறும் நடிகரான ஜெய்சங்கரின் மகனின் புகைப்படமும் அவரைப் பற்றிய தகவல்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்து வந்த காலகட்டத்தில் ஜேம்ஸ் பாண்ட் ஆக வலம் வந்தவர் நடிகர் ஜெய்சங்கர். இவர் 1965 லிருந்து 1999 வரை நிறைய படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெய்சங்கர் பெரும்பாலும் படங்களில் சண்டை காட்சிகள், துப்பறிவாளன், காவலர் போன்ற வேடங்களில் தான் நடித்திருப்பார். இவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இவர் 2000ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய் சங்கர். இவர் கண் மருத்துவராக உள்ளார். இவர் சமீபத்தில் கூட தந்தையின் பிறந்தநாளன்று 15 நபர்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்தார். நடிகர் ஜெய்சங்கரின் இளைய மகன் சஞ்சய் சங்கர். இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து சஞ்சய் சங்கர் ‘இசை’ என்ற படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்பொழுது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அவர் வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொழிலதிபர் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் சஞ்சய் சங்கர்.

தற்பொழுது இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அத்தோடு தற்பொழுது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
