ஒடிசாவில் விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியின் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள நயாரா கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி நேற்று மதியம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு விறகு சேகரித்து விட்டு சிறு நீ வீடு திரும்பி கொண்டிருந்தபோது வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுநீர் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
