மருத்துவமனையில் கேட்ட பயங்கர சத்தம்…. செவிலியர் பலாத்காரம் செய்து கொடூர கொலை…. போலீசாரையே உறைய வைத்த மெக்கானிக்கின் வாக்குமூலம்…!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, அந்தச் செவிலியர் மருத்துவமனையில் தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்த நபர், இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டு அவரைப் படுகொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறைக்கு முக்கியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியைக் காவல்துறையினர் விரைந்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சனா உல்லா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்தச் செவிலியர் பணியாற்றிய மருத்துவமனைக்கு அருகிலேயே இருசக்கர வாகனப் பழுதுநீக்கும் (பைக் மெக்கானிக்) கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இக்கொலை வழக்கைக் தீவிரமாக விசாரித்து வரும் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.