தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகன், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் இந்த மோதலுக்கு நேரடி களமாக மாறியுள்ளது.
பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் சிறப்புரையாளராகப் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் விஜய் குறித்தும், தவெகவின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தவெக மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி பற்றிய விமர்சனங்களும், சாட்டை துரைமுருகனின் சவாலான பேச்சும் அங்கிருந்த தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சாட்டை துரைமுருகன் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கு திரண்ட தவெகவினர் விசில் அடித்தும் கூச்சலிட்டும் இடையூறு செய்யத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த நாதக தொண்டர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்தத் தள்ளுமுள்ளுவின் போது, தவெக நிர்வாகி ஒருவரின் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரு கட்சியினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய போட்டிகள் உருவாகியுள்ள நிலையில், தேனியில் நடந்த இந்த மோதல் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…