தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது ரூ.50,000 வரை பரிசுகளை வெல்லும், மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5 (வரும் புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“சூழல் அறிவோம்” என்ற தலைப்பில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இதற்கு https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் இரண்டு மாணவ குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
