Swiggy, zomato ஆகிய உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன் தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கி வருகின்றது. இப்படியான நிலையில் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் ஜூலை உன்னை இன்று முதல் சென்னையில் இந்த இரண்டு நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல், ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் உணவுகளுக்கான தொகை ஒரு வாரம் கழித்தே உணவகங்களுக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும், டெலிவரி நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கமிஷன் தொகை போக, தாங்கள் பெறும் தொகையில் லாபமே இல்லை என உணவகங்கள் புலம்புகின்றனர். இதனால் இந்த இரண்டு நிறுவனங்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
