கடந்த வாரம் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கான வாகனம் இதோ அருகில் வந்துவிட்டது; அதில்தான் பயணிக்க இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுப் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அரசியல் நகர்வை சூசகமாகத் தொடங்கியிருந்த நிலையில், தற்போது யாருடனும் இன்னும் கூட்டணி அமைக்கவில்லை எனக் கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒருபுறம் கூட்டணி உறுதியாகிவிட்டது போன்ற பிம்பம் நிலவிய சூழலில், “தற்போதுவரை எவருடனும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை” என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இன்னும் மூன்று நாட்களில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளதால், அக்கட்சி எந்தப் பக்கம் சாயப்போகிறது என்பதை அறிய தமிழக அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
