சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.இந்த சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் மாரிமுத்துவுக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி, பசுபதி என பலர் கூறப்பட்டு வந்தனர். ஆனால் பெரும்பாலும் நடிகர் வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சம்மதம் தெரிவிக்காமல் மௌனம் காத்தே வந்தார். இந்நிலையில் தற்பொழுது பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளது சன் டிவி. அதன்படி தற்பொழுது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தையே தூக்கி விட்டனர் .
தற்பொழுது இந்த சீரியலில் அண்ணன் ஆதி குணசேகரன் இல்லாததால் இனி அந்த இடத்திற்கு போய் நாம் எல்லோரையும் ஆட்டி படைக்கலாம் என்று வருகிறார் பொம்பள ரவுடி ஜான்சி ராணி. சும்மாவே ஓவரா வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டம் போடுவார். இப்ப குணசேகரன் வேறு இல்லை. ‘எங்க அண்ணன் போனதற்கு நீங்க எல்லோரும் தான் காரணம். அதனால் உங்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன்’ என்று திமிராக பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் தற்பொழுது குணசேகரன் இருக்கும் அறையிலேயே நான் தங்கிக் கொள்கிறேன் என்று கரிகாலனை கூட்டிட்டு போகிறார். மொத்தத்தில் குணசேகரனிடம் இருந்து தப்பித்த வீட்டில் உள்ள பெண்கள் பொம்பள ரவுடி ஜான்சிராணியிடம் மாட்டிக் கொண்டார்கள். எப்படியாவது குணசேகரன் இல்லாத இடத்தை வேறொரு விதமாக விறுவிறுப்பான கதையை வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறது சன் டிவி. பொறுத்திருந்து பாப்போம். இவர்களது முயற்சி வெற்றி பெறுமா என்பதை.