நிர்மலா பெரியசாமி செய்தி வாசிப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்தார். கடந்த 2093ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திர பேச்சாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார்.
விஜயின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நிர்மலா பெரியசாமி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியதாவது, 30 வருடம் நடித்து ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்துவிட்டு விஜய் தனக்கு பணம் முக்கியமில்லை என கூறுகிறார்.
இனியும் அவருக்கு பணம் தான் முக்கியம். அது வெறும் வசனம் தான். விஜய் பர்சனல் லைஃப்லையே சரியா இல்ல. ஒரு மனைவி, குழந்தைகளை வைத்து வாழ முடியல. விஜய் இப்பதான் அரசியலில் வந்து இருக்காரு. அவர் ரியல் ஹீரோவா ரீல் ஹீரோவான்னு தெரியல. இப்போ வரைக்கும் அவர் ரியல் ஹீரோவுக்கான எந்த வேலையும் பண்ணல என விமர்சித்துள்ளார். இதே போல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் விமர்சித்து பேசியுள்ளார்.
