தமிழகத்தில் ரேஷன் அட்டை வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிப்பதற்கும் திருத்தங்களை செய்வதற்கும் அரசு அனுமதிக்கிறது. புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு தனி சமையலறையுடன் வசிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் உணவு வழங்கல் துறையின் பொது விநியோகத் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர் நீக்கமாகிய சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செய்யலாம். ரேஷன் அட்டைதாரர்கள் தேவைக்கு ஏற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒப்புதல் தருவார்கள். இதுதான் நடைமுறையாக இருந்தது.
இதனிடையே மகளிர் உரிமைத்தொகை பெற ரேஷன் கார்டு அவசியம் என்பதால் புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் உணவுத்துறை, உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம் மற்றும் உறுப்பினர் நீக்கமாகிய சேவைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை கடைப்பிடிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்த ஒவ்வொரு சேவைக்கும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஒரு முறையும் பிறகு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு முறையும் விண்ணப்பிக்க முடியும். ஆவணங்களை பதிவிறக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…