தமிழகத்தை பொறுத்தவரையில் ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. காரணம் அரசு வழங்கக்கூடிய நிதி உதவிகள் அனைத்தும் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு மட்டும்தான் கிடைக்கின்றன. குறிப்பாக தற்போது அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைய வேண்டுமென்றாலும் அதற்கும் ரேஷன் கார்டு கட்டாயம். இதனால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பலரும் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகிறார்கள். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் அண்மையில் திருமணம் செய்தவர்கள் தான்.
அவர்கள் செய்யக்கூடிய தவறு, முந்தைய ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயரை நீக்குவதில்லை. கணவன் மனைவி இருவரும் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து தங்களுடைய பெயர்களை நீக்கிய பிறகுதான் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல சரியான முகவரியை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் விசாரணையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
