இன்றைய உலகில் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் பரவலாக பயன்படுத்தி வருகிறது . ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சமமாகவே மோசடிகள் நடந்து வருகிறது. புதிதாக சோஷியல் மீடியாவில் பரவும் மோசடி , 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஆரம்பித்துள்ளார்கள்.
வீடியோவில் பதிவானவை, ஒருவர் 500 ரூபாய் நோட்டு கட்டை எண்ணும்போது அதன் உள்ளே 2 நோட்டுகள் மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வெளியில் பார்க்கும்போது 500 ரூபாய் நோட்டுகளாக தோன்றினாலும், எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @Lollubee என்ற கணக்கில் பகிரப்பட்டிருக்கிறது . பல்லாயிரக்கணக்கான லைக் களும் , பல கமெண்ட் மூலமாக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது இதை தவிர்க்க நீங்கள் எங்கு பண கட்டுகளை வாங்கினாலும் தனித்தனியாக எண்ணி சரிபார்த்து வாங்குங்கள் . என்னதான் இந்த உலகம் எச்சரிக்கையுடன் இருந்தாலும் புதிது புதிதாக மோசடிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, தனி நபராக நீங்கள் பொறுப்புடன், எச்சரிக்கையுடன் இருங்கள்.
New scam, please be aware. pic.twitter.com/n22UR8uGcO
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) August 14, 2025
