என்ன ஒரு தில்லு முல்லு… கட்டு மொத்தமும் 500 ரூபாய் நோட்டு.. உத்து பார்த்தால் எல்லாமே தெரியுது.. பகீர் கிளப்பும் வீடியோ..!

By Divyamayakannan on ஆவணி 16, 2025

Spread the love

இன்றைய உலகில் யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் பரவலாக பயன்படுத்தி வருகிறது . ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சமமாகவே மோசடிகள் நடந்து வருகிறது. புதிதாக சோஷியல் மீடியாவில் பரவும் மோசடி , 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஆரம்பித்துள்ளார்கள்.

வீடியோவில் பதிவானவை, ஒருவர் 500 ரூபாய் நோட்டு கட்டை எண்ணும்போது அதன் உள்ளே 2 நோட்டுகள் மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வெளியில் பார்க்கும்போது 500 ரூபாய் நோட்டுகளாக தோன்றினாலும், எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.

   

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @Lollubee என்ற கணக்கில் பகிரப்பட்டிருக்கிறது . பல்லாயிரக்கணக்கான லைக் களும் , பல கமெண்ட் மூலமாக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது இதை தவிர்க்க நீங்கள் எங்கு பண கட்டுகளை வாங்கினாலும் தனித்தனியாக எண்ணி சரிபார்த்து வாங்குங்கள் . என்னதான் இந்த உலகம் எச்சரிக்கையுடன் இருந்தாலும் புதிது புதிதாக மோசடிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, தனி நபராக நீங்கள் பொறுப்புடன், எச்சரிக்கையுடன் இருங்கள்.