vilaku

வீட்டில் விளக்கேற்றிய பின்பு மறந்தும் இதை செஞ்சுராதீங்க… அதனால் அபசகுனம் உண்டாகும்…

By admin on கார்த்திகை 22, 2024

Spread the love

இந்து மத வழிபாட்டில் விளக்கேற்றுவது என்பது மிக முக்கியமான விஷயம். எந்த ஒரு பூஜை என்றாலும் விளக்கேற்றி தான் அதை தொடங்குவார்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் வீட்டிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். ஒரு சிலர் அதிகாலையிலும் மாலை இருவேளைகளும் விளக்கேற்றுவார்கள். ஆனால் விளக்கேற்றிய பின்பு செய்யக்கூடாத ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. இதனால் அபசகுனம் உண்டாகும். அவை என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

பெண்கள் மகாலட்சுமியின் அம்சம். அதனால் வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு. வீட்டில் பெண்கள் விளக்கேற்றும் போது தலையை விரித்து போட்டுக் கொண்டோ கையில் வளையல் இல்லாமல் நெற்றியில் பொட்டு இல்லாமலோ விளக்கு ஏற்ற கூடாது. அதேபோல் வீட்டில் விளக்கு எரியும்போது யாரும் குளிக்க கூடாது. விளக்கை குளிர்வித்த பின்பு குளிக்கலாம்.

   

மாலையில் விளக்கேற்றி வைத்து குளிர்வித்த பிறகு வீட்டை பெருக்கி குப்பையை அள்ளி வெளியே போடக்கூடாது. அதேபோல் இரவு விளக்கேற்றிய பிறகு யாருக்கேனும் பணம் கொடுக்கக் கூடாது. இதனால் நம் வீட்டில் உள்ள ஐஸ்வரியம் வெளியே சென்று விடும் என்று கூறுகிறார்கள்.

 

அதேபோல் வீட்டில் விளக்கேற்றி வைத்து குளிர்வித்த பிறகுதான் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லக்கூடாது. இதனால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டை விட்டு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது. எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சாஸ்திரப்படி ஒரு சில விஷயங்களை நாம் கடைபிடிக்கும் போது அவை நல்ல பலன்களை நமக்கு தரும் என்று கூறுகிறார்கள்.