வியாழக்கிழமை நடைபெற்ற ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred 2026) தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், இந்தப் பாகிஸ்தான் வீரரை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு (£190,000) ஏலம் எடுத்துள்ளார். மற்ற இந்திய உரிமையாளர்கள் எவரும் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்யாத நிலையில், காவ்யா மாறன் எடுத்த இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்ரார் அகமதுவை ஒப்பந்தம் செய்ததற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அவர் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகச் செய்த சர்ச்சைக்குரிய பதிவுகள் ஆகும். ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவத்தைக் கேலி செய்யும் வகையில் “தேநீர் சைகை” (Tea Gesture) காட்டும் வீடியோவை அவர் பகிர்ந்து இந்தியாவை ட்ரோல் செய்திருந்தார். மேலும், 2025 ஆசியக் கோப்பைப் போட்டியின் போது இந்திய வீரர்களை அவமதிக்கும் வகையில் தேவையற்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்தகைய பின்னணி கொண்ட ஒரு வீரருக்குக் கோடி கணக்கில் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருப்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் காவ்யா மாறனை இலக்கு வைத்து ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். “இந்தியாவைப் பகிரங்கமாக அவமதித்த ஒரு வீரருக்கு SRH உரிமையாளர் முக்கியத்துவம் கொடுப்பது வெட்கக்கேடானது” என்றும், “புத்திசாலித்தனம் இல்லாத செயல்” என்றும் இணையவாசிகள் சாடி வருகின்றனர். மேலும் மற்றொருவர், “மூளை இல்லாத அழகுக்கு காவ்யா மாறன் சரியான உதாரணம்” என்றார். மற்றொரு பயனர், “இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போரில் அப்ரார் அகமது வெற்றி பெற்றார் சன்ரைஸ் லீட்ஸ் அணி, தி ஹண்ட்ரட் லீக்கில் அப்ரார் அகமதுவை £190,000க்கு வாங்கியது. இந்திய உரிமையாளர் காவ்யா மாறன், ஹண்ட்ரட் லீக்கில் அப்ரார் அகமதுவைத் தேர்ந்தெடுத்தார், மற்ற உரிமையாளர்கள் எந்த பாகிஸ்தானிய வீரர்களையும் தேர்வு செய்யவில்லை” என்றார். மற்ற அணிகள் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணித்த நிலையில், காவ்யா மாறன் மட்டும் அப்ராரைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வியுடன் #BoycottSRH போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வருகின்றன.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…