இந்தியாவின் கொல்கத்தா நகரில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட மார்கோ என்ற ஆஸ்திரேலிய ஆண் பயணிக்கு, அங்குள்ள வீதியில் மிகவும் அசிங்கமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ரிக்ஷாவில் அமர்ந்திருந்த ஒரு இந்திய இளைஞன் அவரிடம் தன் கைகளில் முத்தமிடுமாறு வற்புறுத்தியுள்ளார். அந்தப் பயணி தடுத்து நிறுத்தப்பட்டதோடு, அவரது கையைப் பிடித்துக்கொண்டு அந்த இளைஞன் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராத செயலால் மிகவும் சங்கடமடைந்த ஆஸ்திரேலியப் பயணி, “நான் உனக்கு முத்தமிட வேண்டுமா? இல்லை, என்னை மன்னித்து விடுங்கள், நான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல” என்று கூறி அங்கிருந்து விலக முயன்றுள்ளார். ஆனால், அந்த இளைஞன் விடாப்பிடியாக அவரது கையைப் பிடித்துக்கொண்டு தன் கன்னத்தைக் காட்டி வற்புறுத்தியுள்ளார். ஒருவழியாக அவரிடமிருந்து தப்பித்த பயணி, தன்னைவிட வயதில் சிறியவர்கள் தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DZl4zXhpnUX/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் இந்த மோசமான நடத்தைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அனைத்து இந்தியர்களும் இப்படிப்பட்டவர்கள் அல்ல என்று கூறி அந்த வெளிநாட்டுப் பயணியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதே வேளையில், ஒரு சில பயனர் வியூஸ்கள் மற்றும் கன்டென்ட்க்காக இதுபோன்ற இடங்களுக்கு வெளிநாட்டினர் சென்று ஒட்டுமொத்த நாட்டையும் அவப்பெயர் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால்…
சென்னையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா என்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்ட அரசு மருத்துவமனையில், உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து கம்மலைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து…
மத்திய அரசின் 'பிஎம் உஜ்வாலா யோஜனா 3.0' திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய எல்பிஜி…