இந்தியாவின் கொல்கத்தா நகரில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட மார்கோ என்ற ஆஸ்திரேலிய ஆண் பயணிக்கு, அங்குள்ள வீதியில் மிகவும் அசிங்கமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ரிக்ஷாவில் அமர்ந்திருந்த ஒரு இந்திய இளைஞன் அவரிடம் தன் கைகளில் முத்தமிடுமாறு வற்புறுத்தியுள்ளார். அந்தப் பயணி தடுத்து நிறுத்தப்பட்டதோடு, அவரது கையைப் பிடித்துக்கொண்டு அந்த இளைஞன் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராத செயலால் மிகவும் சங்கடமடைந்த ஆஸ்திரேலியப் பயணி, “நான் உனக்கு முத்தமிட வேண்டுமா? இல்லை, என்னை மன்னித்து விடுங்கள், நான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல” என்று கூறி அங்கிருந்து விலக முயன்றுள்ளார். ஆனால், அந்த இளைஞன் விடாப்பிடியாக அவரது கையைப் பிடித்துக்கொண்டு தன் கன்னத்தைக் காட்டி வற்புறுத்தியுள்ளார். ஒருவழியாக அவரிடமிருந்து தப்பித்த பயணி, தன்னைவிட வயதில் சிறியவர்கள் தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DZl4zXhpnUX/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான இந்தியர்கள் இந்த மோசமான நடத்தைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அனைத்து இந்தியர்களும் இப்படிப்பட்டவர்கள் அல்ல என்று கூறி அந்த வெளிநாட்டுப் பயணியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். அதே வேளையில், ஒரு சில பயனர் வியூஸ்கள் மற்றும் கன்டென்ட்க்காக இதுபோன்ற இடங்களுக்கு வெளிநாட்டினர் சென்று ஒட்டுமொத்த நாட்டையும் அவப்பெயர் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…