திருட வந்ததாக நினைத்து இளம் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

நேபாள நாட்டின் போஹாரா மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சுஷ்மிதா சரு மஹர் என்பவர் வேலை தேடி இந்தியாவிற்கு வந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு ஒரு மணி அளவில் செல்போனில் வந்த அழைப்பை தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சிலர் சுஷ்மிதாவை திருட வந்த பெண் என்று நினைத்து அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த கும்பல் மிரட்டும் வகையில் கூச்சலிட்டு சுஷ்மிதாவை பிடிக்க முயற்சி செய்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அந்த கும்பல் சுஷ்மிதாவை கொடூரமாக தாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டை உள்ளிட்டு ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய நிலையில் காயமடைந்த சுஷ்மிதா தான் திருடவில்லை இங்கு வாடகைக்கு வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் சமாதானம் ஆகாது அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்கிய நிலையில் உடனே தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர். அந்தப் பெண்ணை கும்பலாக சேர்ந்து அப்பகுதியினர் தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago