‘நீயா நானா’ கோபிநாத் விஜய் டிவியில் ஆரம்பத்தில் என்ன வேலை பாத்தருன்னு தெரியுமா உங்களுக்கு?…வெளியான புகைப்படம்…அதிர்ச்சியான ரசிகர்கள்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘நீயா நானா’.  இந்தநிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நீயா நானா கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தவர்தான் கோபிநாத். திரையுலகம் மீதுள்ள ஆர்வத்தில் பல சேனல்களில் வாய்ப்பு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

   

கோபிநாத் ரேடியோ சேனலில் ஆர்ஜெவாக வேலை செய்தார். பிறகு அவரின் திறமையை பார்த்து ராஜ்டிவி செய்தி வாசிப்பாளராக பணி புரிய அழைத்தது. அதன் பிறகு அவரின் திறமையை பார்த்து விஜய் டிவியில் ‘குற்றமும் பின்னணியும்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககூறினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தலைப்புகள் வைத்து அதை மக்களிடம் சுவாரஸ்யமான முறையில் கொண்டு செல்வார் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலமே  அவர்  ‘நீயா நானா’ கோபிநாத் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் இணைந்த புதிதில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார். அப்போது எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தாரா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….