திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரங்கேறிய கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் அடித்ததால் பின்னால் வந்த அரசு பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தின் வீரியத்தால் பேருந்துகளின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அவற்றில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதே பகுதியில் கடந்த 6 மாதங்களில் 10 விபத்துகள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…