தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியை அமைக்க முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் பக்காவாக காய் நகர்த்தி மீண்டும் அதிமுக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இப்படியான நிலையில் தமிழகத்தில் NDA வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் அமித்ஷா கூறியபடி மட்டுமே நடப்பேன் எனவும் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் நேரில் சென்று பேசுங்கள் என்றும் கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி இல்லை என ஈபிஎஸ் பேசி வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
