தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு உள்ளது.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அந்த காதல் அப்படியே பாதியில் முடிந்து விடும் என்று பலர் கூறி வந்த நிலையில் அவர்களின் அன்பை நிரூபிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நயன்தாரா அடிக்கடி தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் அடிக்கடி தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தனது இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு இணைந்து அந்த அழகிய தினத்தை நயன்தாரா கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் மகன்கள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் 'கோ-பே' (Copay) மற்றும் 'டிசீஸ் கேப்' (Disease Cap)…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மாடுகள்…
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…