nayanthara refused to act with sasikumar
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நயன்தாரா. தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா என பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நயன்தாரா. ஹோம்லியான கேரக்டர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிக அன்பை பெற்றார் நயன்தாரா.
Nayanthara in billa
ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக கிளாமர் ரூட்டை எடுத்தார். அதிலும் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து ஷாக் தந்தார். இவரின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. அந்த சமயத்தில் தான் நாடோடிகள் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே சுப்ரமணியபுரம் என்ற ஹிட் படத்தை சசிகுமார் கொடுத்ததால் நயன்தாராவும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
Ananya and sasikumar in nadodigal
ஆனால், இங்கு தான் ட்விஸ்ட்டே, நயன்தாராவின் நெருங்கிய நண்பர்களான சில நடிகர்கள். நீ சசிகுமாருடன் நடிப்பது தவறான முடிவு, பில்லா மாதிரி படம் பண்ணிட்டு சசிகுமாருடன் நடித்தால் உங்கள் மார்க்கெட் போய்விடும் என கூறி நயன்தாராவை குழப்பி விட்டுள்ளார்கள். அதனால் அட்வான்ஸ் வாங்கியிருந்த நயன்தாரா, அதை திருப்பி கொடுத்துவிட்டு இதில் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
Sasikumar and Nayanthara
சசிகுமார் மட்டுமல்ல நாடோடிகள் படக்குழுவே இதனால் அப்செட் ஆகி விட்டார்கள், இறுதியில் அனன்யா அந்தப்படத்தில் நடித்தார். பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்த நயன்தாரா இதுவரை சசிகுமாருடன் மட்டும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…
சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…