பிக்பாஸ் சீசன் 9-லிருந்து நான்கே நாட்களில் வெளியேறிய நந்தினி, அந்த நிகழ்ச்சி குறித்தும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் நடப்பவை எதுவுமே உண்மையில்லை என்றும், போட்டியாளர்களைச் சண்டை போடத் தூண்டிவிட்டுத் தன்னை ஒரு பைத்தியக்காரி போலச் சித்தரித்து அனுப்பிவிட்டதாகவும் அவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.
இதனால் தனது திரைப்பயணமே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், தனக்குக் கவுன்சிலிங் தேவையில்லை, நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்குத்தான் அது தேவை என கொந்தளித்துள்ளார். விஜய் சேதுபதி போட்டியாளர்களைச் சரியாக மதிப்பதில்லை என்றும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கியது போல இது சிறப்பாக இல்லை என்றும் நந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.
நிகழ்ச்சியில் நடக்கும் மோதல்களைத் தடுக்காமல், எடிட்டிங் மூலம் தங்களுக்குச் சாதகமான காட்சிகளை மட்டுமே ஒளிபரப்புவதாகப் புகார் கூறியுள்ளார். சாண்ட்ரா, பிரஜன் போன்றவர்களை வெளியே அனுப்பாமல் தன்னை மட்டும் சதி செய்து அனுப்பியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையே ஒரு கசப்பான அனுபவமாகக் கருதுகிறார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…