#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகள், அக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ராசித்தனர்.
தன்னை வெற்றி நாயகனாக ஆக்கிய தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதல்மைச்சராக தான் இறக்கும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுப்பவர். அதேபோல் திரையில் எதிரியாக நடித்தாலும் எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அப்படி எம்ஜிஆர்க்கு வில்லனாக பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார். ஆனால் நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒருமுறை அரசிளங்குமாரி திரைப்படத்தில் எம்ஜிஆரும் நம்பியாரும் சண்டை போடுவது போல் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நம்பியாரின் வாள் எம்ஜிஆரின் புருவத்திற்கு கீழே பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. படக்குழுவினர் நம்பியாரை திட்டிருக்கின்றனர். எதற்காக இப்படி செய்தீர்கள் பார்த்து நடிக்க கூடாதா என்று கூறினர். நம்பியார் எதுவுமே பேசவில்லை.
பின்னர் எம்ஜிஆர் தனியாக இருக்கும்போது, நம்பியார் அவரிடம் எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார். ஏன் என்று கேட்டார் எம்ஜிஆர். உடனே நம்பியார் இயக்குனர் என்னை உங்கள் நெஞ்சை நோக்கி தான் வாளை குத்த சொன்னார் ஆனால் நான்தான் மாற்றி செய்து விட்டேன் என்று கூறினார். உடனே அதைக் கேட்ட எம்ஜிஆர் அடப்பாவி அப்படியா சொன்னார் என்று கூறி சிரித்துவிட்டார். அந்த அளவுக்கு இருவரும் நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமை காக்கும் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக், சசிகலா…
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…
கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…