தமிழக அரசியலின் ஆகச்சிறந்த அடையாளமாகவும், பொதுவுடைமை இயக்கத்தின் பேராளுமையாகவும் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா ஆர்.நல்லகண்ணு (101) அவர்கள் காலமான செய்தி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. எளிமை, நேர்மை மற்றும் தியாகத்தின் இலக்கணமாக வாழ்ந்த அவர், தனது வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் அர்ப்பணித்தவர். தூய்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக விளங்கிய அவரது மறைவு,
