தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாக ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதால் அவரை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி சமீபத்தில் இபிஎஸ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையை நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையனை தொடர்ந்து இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளார். அங்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் சி.பி ராதாகிருஷ்ணனை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. NDA கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகல், அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம், பாஜக உட்கட்சி பிரச்சனைகள் குறித்து பேச உள்ளாராம். மீண்டும் தமிழக அரசியல் பஞ்சாயத்து டெல்லியில் கூட உள்ளது.
