இப்படி பண்ண வெக்கமா இல்லையா?… முருகனை வைத்து அரசியல் எதுக்கு?.. சீமான் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 13, 2025

Spread the love

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தமிழ்நாட்டில் முருகனை மையமாக வைத்து நடக்கும் அரசியல் குறித்து கேள்விகளை எழுப்பினார். அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை முடிவடைந்ததால் தமிழகத்தில் சிலர் தற்போது முருகனை வைத்து அரசியல் செய்ய தொடங்கியுள்ளனர். வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது, முருகனைக் கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா, எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ள.

தொடர்ந்து பேசிய சீமான், முருகன் சைவ கடவுளா அல்லது இந்து கடவுளா என்ற கேள்விக்கு, முருகன் என் ரத்தம், என் இனத்தின் கடவுள், சிவனும் முருகனும் இந்து கடவுளாய் என என்னுடன் விவாதம் செய்ய தயாரா என்று சீமான் சவால் விடுத்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், இந்தப் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் தனக்கு சொந்தம் எனவும் அவர் கூறினார்.