கரூர் மாவட்டம் பெரிய பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜோதிகா என்ற பெண் ஆட்டோ டிரைவருக்கும் கார்த்திக்கிற்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கார்த்திக் தகாத வார்த்தைகளால் பேசி ஜோதிகாவை அடித்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி அவர் ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் இரவு கார்த்திக் தனது சித்தப்பா வீட்டில் இரண்டு தங்கைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை நேரம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு கார்த்தி ஒளிந்து கொண்டார். உடனே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்கைகளின் கழுத்தில் கத்தியை வைத்து கார்த்திக் எங்கே என மிரட்டியுள்ளனர். அண்ணன் இங்கே வரவில்லை என தங்கைகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் வீடு முழுக்க தேடி பார்த்து கார்த்திக்கை கண்டுபிடித்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…