Connect with us

‘என்னோட அம்மாவுக்கு இந்த நோய் இருக்கு’…! மேடையில் உருக்கமாக பேசி கண்கலங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர்..!

CINEMA

‘என்னோட அம்மாவுக்கு இந்த நோய் இருக்கு’…! மேடையில் உருக்கமாக பேசி கண்கலங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர்..!

 

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து அவர் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

   

கோலிவுட்டில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கைவசம், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படம் என எண்ணற்ற படங்கள் உள்ளன.  இந்த நிலையில், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்கவும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் அப்பல்லோ கேன்சர் செண்டர் சார்பில் கொண்டாடப்பட்ட உலக ரோஜா தின நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் உருக்கமாக பேசினார். கடந்த ஆண்டு தனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதாகவும், அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டினார். மேலும் தனது அம்மா பற்றி மேடையில் பேசும் பொழுது அவர் கண்ணீர் சிந்தியது அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

Continue Reading
To Top