தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்ந்தவர் டி.இமான். இவரது இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதன் முதலாக தமிழன் படத்தின் மூலம் இமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இமான் இசை அமைத்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் இமான் பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
இமான் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்தார் அவர்களுக்கு வெரோனிகா, பிளஸ்சிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதன் பிறகு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற அமலி என்பவரை இமான் இரண்டாவதாக திருமணம் செய்தார் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மறுமணம் குறித்து முகநூலில் பதிவிட்ட இமான் தனது இரண்டு மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இமான் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் மறுமணம் குறித்து எனது தந்தை பேசும்போது, நான் ஒரு சில கண்டிஷன் போட்டேன். ஒரு நல்ல தாயும், குழந்தையும் வேண்டும் என கூறினேன். ஏனென்றால் ஒரு நல்ல தாய் தான் நல்ல மனைவியாக இருக்க முடியும். வர போகும் குழந்தை எனது குழந்தைகளான வெரோனிகா, பிளஸ்சிகாவுக்கு வயது குறைவானவராக இருக்க வேண்டும் என கூறினேன்.
அதோடு ஆண் குழந்தையாக இருப்பதையும் நான் விரும்பவில்லை. ஏனென்றால் எனது குழந்தைகள் வரும்போது ஆண் பிள்ளை நான்தான் என்ற கர்வத்தோடு இருக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் பிள்ளைகள் என்னை அப்பா என்னை கூப்பிட்டு மூன்று வருடங்கள் ஆனது. தினமும் இவள் என்னை அப்பா என்று கூப்பிடும் போது ஒரு அவார்ட் வாங்கிய சந்தோஷத்தை உணர்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி நகர்வுகள் குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…