நள்ளிரவில் போனில் பேசிய மனைவி.. மொபைலைத் தர மறுத்ததால் ஸ்கார்ஃப்பால் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்… மாடியில் பிள்ளைகள் தூங்கியபோது நடந்த கொடூரம்..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மானேசர் பகுதியில், நள்ளிரவில் மனைவி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்த கணவன், அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரைச் சேர்ந்த நரேந்திர சிங் (37) மற்றும் அவரது மனைவி காஜல் தேவி (36) ஆகிய இருவரும் தங்களது நான்கு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நரேந்திர சிங்கிற்கு, தனது மனைவியின் நடத்தையின் மீது நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் நரேந்திர சிங் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, மனைவி காஜல் தேவி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர சிங், யாரிடம் பேசுகிறாய் எனக் கேட்டு அவரது மொபைல் போனைத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், காஜல் போனைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நரேந்திர சிங், வீட்டில் இருந்த ஸ்கார்ஃப் (துப்பட்டா) ஒன்றை எடுத்து காஜலின் கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

   

இந்தக் கொடூர சம்பவம் நடந்த சமயத்தில், இவர்களது நான்கு குழந்தைகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு கீழே நடந்த இந்த கொடூரம் குறித்து எதுவும் தெரியவில்லை. மனைவியைக் கொலை செய்த பின்னர் நரேந்திர சிங் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மறுநாள் காலையில் காஜல் தேவியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட மானேசர் போலீசார், தலைமறைவாக இருந்த கணவர் நரேந்திர சிங்கை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.