‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லையாக நடித்துக் கொண்டிருந்த காவ்யா தற்பொழுது இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல்களிள் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இது கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையும், அன்பு, பாசம், கோபம் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறது. இந்த சீரியல் மூன்று வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடைபோடும் இந்த தொடர் தற்போது தான் தனது ஆயிரம் எபிசோடை கொண்டாடியது.
இந்த தொடரில் ஏற்பட்ட நடிகர்களின் மாற்றத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கதாபாத்திரம் முல்லை. இந்த தொடரில் முல்லையாக நடித்து கொண்டிருந்தவர் சித்ரா. இவர் எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த கதாபாத்திரத்தை ஏற்று யார் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்க காவியா என்பவர் நடிக்க ஆரம்பித்தார்.
முதலில் இவரை அங்கீகரிக்காத மக்கள் தற்பொழுது தான் ஏற்றுக் கொள்ள முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவரும் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகி உள்ளார். தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்த முல்லையாக ‘அபிநயா’ நடிக்க இருப்பதாக கூறுகின்றனர். இவர் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஏற்கனவே சித்ராவின் தோழியாக ஒரு காட்சியில் வந்து செல்வார். பொறுத்திருந்து பார்ப்போம் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த முல்லை யார் என்று.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து,…
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…