கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சனோஜ்குமார் என்பவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ள நிலையில் இந்த தம்பதிகள் சொந்த ஊர் பீகாராகும். தற்போது கர்நாடகாவில் சண்டூர் அருகே உள்ள தொழிற்சாலையில் தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த பிரியங்கா கடந்த சனிக்கிழமை காலையில் தன்னுடைய இரண்டு மாத பெண் குழந்தை காணவில்லை என்றும் யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை தேடும் பணிகள் ஈடுபட்ட நிலையில் குழந்தை கடத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பிறகு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தியதில் அதிகாலையில் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு பிரியங்கா செல்வதும் வீட்டுக்கு திரும்பி வரும்போது குழந்தை இல்லாமல் வந்த காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரியங்காவை பிடித்து விசாரித்த போது தன்னுடைய குழந்தை கடத்தப்படவில்லை தானே கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அவரை கைது செய்ததில் மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததால் இரண்டு மாதங்களை ஆன அந்த குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது. பிறகு கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
