ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் தனது சிறிய மகளுடன் ரயிலுக்காகக் காத்திருந்தார். பயணக் களைப்பு மற்றும் நீண்ட நேரக் காத்திருப்பு காரணமாக, அந்தப் பெண் நடைமேடையிலேயே சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தார். அந்தச் சமயத்தில், அவர்களுக்கு அருகிலேயே ஒரு நபர் படுத்துக் கொண்டிருந்தார்.
அந்த நபர் அப்பெண்ணின் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். ஆரம்பத்தில் அங்கு என்ன நடக்கிறது என்பதை நிதானமாக கவனித்த அந்தப் தாய், அந்த நபரின் நோக்கம் தவறானது என்பதை உறுதி செய்துகொண்டார். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த அவர், அடுத்த நொடியே ஆவேசமடைந்தார்.
एक महिला अपनी छोटी बच्ची के साथ रेलवे स्टेशन पर ट्रेन का इंतजार कर रही थी।
थकान की वजह से वह वहीं प्लेटफॉर्म पर लेट गई थी, उसी दौरान पास में एक व्यक्ति भी लेटा हुआ था,
उस व्यक्ति ने महिला की बच्ची के साथ अनुचित हरकत करने की कोशिश की,
शुरुआत में महिला ने स्थिति को समझते हुए… pic.twitter.com/mWBtugGPCd
— ʀᴜᴅʜʀᴀ ʏᴀᴅᴀᴠ🇮🇳 (@Rudhrayadav001) May 3, 2026
தன் மகளைக் காக்க துணிச்சலுடன் எழுந்த அந்தப் பெண், அங்கேயே தனது செருப்பால் அந்த நபரை சரமாரியாக அடித்து வெளுத்தார். பொதுமக்களின் முன்னிலையில் அவருக்கு தகுந்த பாடம் புகட்டியதுடன், தாமதிக்காமல் உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். அந்தத் தாயின் துரிதமான செயலும் தைரியமும் அங்கிருந்தவர்களை வியப்படையச் செய்தது.
