ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் கேட்போரையே உறைய வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள எஸ்கலேட்டரில் (நகரும் படிக்கட்டு) பெண் ஒருவர் தனது கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடி மேலே ஏறிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடல் சமநிலை தவறியதால், அவர் பின்னோக்கி விழத் தொடங்கினார். குழந்தையுடன் அவர் தடுமாறி விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்ற நிலையில், அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சியில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
महिला के गोद में था बच्चा, एस्केलेटर पर बिगड़ गया संतुलन
जयपुर मेट्रो का एक रोंगटे खड़े करने वाला वीडियो सामने आया है. एक महिला बच्चे को गोद में लेकर एस्केलेटर पर चढ़ रही थी तभी उसका बैलेंसे बिगड़ गया और वह गिरने लगी. इसी दौरान भागते हुए एक पुलिसकर्मी पहुंचा और महिला को गिरने से… pic.twitter.com/rEvzQ19xBh
— NBT Hindi News (@NavbharatTimes) April 24, 2026
அந்தப் பெண் விழுவதைக் கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், மின்னல் வேகத்தில் ஓடி வந்து நொடிப் பொழுதில் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தாங்கிப் பிடித்தார். அந்த அதிகாரியின் சமயோசித புத்தியால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், அந்த போலீஸ் அதிகாரியின் துரித நடவடிக்கையைப் பாராட்டி வருகின்றனர். “கடவுள் மனித ரூபத்தில் வந்து காப்பாற்றியுள்ளார்” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
