மேரிலாந்தில் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாக அடித்துக் கொன்று, சடலத்தைச் சூட்கேஸில் அடைத்து மறைத்த கொடூரத் தாய், நீதிமன்ற விசாரணையில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான டேரியன் ராண்டில் என்ற அந்தத் தாய், கடந்த ஜூன் 10, 2025 அன்று தனது மகள் நோலா டிங்கின்ஸ் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகக் கூறி போலீசில் பொய்ப் புகார் அளித்துள்ளார். இதனால் குழந்தையைத் தேட ‘ஆம்பர் எச்சரிக்கை’ (Amber Alert) விடுக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே நார்த் ஈஸ்ட் நகரில் உள்ள ஒரு வீட்டின் அருகே சூட்கேஸிற்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில், குழந்தை கடத்தப்படவில்லை என்பதும், தாயே அவளை அடித்துக் கொன்றதும் அம்பலமானது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, கழிப்பறையில் காயங்களுடன் குழந்தை சாய்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை ராண்டிலின் மொபைலில் இருந்து போலீசார் கைப்பற்றினர். ஆரம்பத்தில் வெந்நீரால் காயம் ஏற்பட்டதாகக் கூறி நாடகமாடிய ராண்டில், இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார். தன் குழந்தை பேச்சைக் கேட்காவிட்டாலோ அல்லது பொய் சொன்னாலோ, அவளைப் பெல்ட், கை மற்றும் செருப்பால் அடிப்பது வழக்கம் என்றும், அதுதான் தான் கொடுக்கும் வழக்கமான தண்டனை என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தக் கொடூரத்தின் உச்சமாக, ஜூன் 9, 2025 அன்று இரவு, குழந்தை மீது தான் கடுமையான கோபமடைந்து, கட்டுப்பாட்டை இழந்து சுயநினைவை இழக்கும் வரை சுமார் 15 முதல் 20 முறை பெல்ட்டால் மூர்க்கமாக அடித்ததாக ராண்டில் கூறியுள்ளார். அடி தாங்காமல் குழந்தை உயிரிழந்ததை உணர்ந்ததும், தனது காதலரான 44 வயது செட்ரிக் பிரிட்டனை உதவிக்கு அழைத்துள்ளார். பிரிட்டன் முதலுதவி செய்ய முயன்றும் பலனளிக்காததால், இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை டேப்பால் சுற்றி, படிக்கட்டில் இருந்த ஒரு சூட்கேஸிற்குள் திணித்துள்ளனர். இந்த விபரீதத்தைச் செய்து முடித்த உடனேயே, எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி இருவரும் சைனீஸ் உணவகத்திற்குச் சென்று உணவு வாங்கிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் சோதனையிட்டபோது, ராண்டிலின் வீட்டு கேரேஜ் குப்பைத் தொட்டியில் ரத்தம் படிந்த குழந்தையின் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன. காதலன் பிரிட்டன் கொடுத்த தகவலின்படி, அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சூட்கேஸைத் திறந்து பார்த்த அதிகாரிகள், கருவில் இருக்கும் குழந்தையைப் போன்ற நிலையில், டேப்பால் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருந்த நோலாவின் மெலிந்த சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தற்போது, இந்தத் தம்பதியினர் மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலைக் குற்றம், மரணத்தை விளைவித்த குழந்தை துஷ்பிரயோகம் உள்ளிட்ட 11 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…
திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…