நீரிழிவு நோயை ஓட ஓட விரட்டும் அதிசய இலை… காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் உடலில் ஹார்மோன்கள் வளர்ச்சிதை மாற்றம், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மக்கள் எப்போதும் தங்களுடைய நவீன மருந்துகளை நம்பி உள்ளார்கள். ஆனால் நவீன மருந்துகளுக்கு  சமமாக ஒரு இயற்கை தாவரம் உள்ளது. அது ஆயுர்வேதத்தில் ஒரு அதிசய தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த தாவரம் வேறு எதுவும் இல்லை.  முருங்கை இலை தான். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மேலும் பல ஆய்வுகள் அவை நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கட்டுப்படுத்துவதில் உதவியாக இருப்பதை நிரூபித்துள்ளது.

முருங்கை இலை பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலைகளில் விட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இது தவிர குளோரோஜினிக் அமிலம் உள்ளது. இது ரத்த சர்க்கரையை  கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் உணர்வுகளை அதிகரித்து உடல் குளுக்கோஸ் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் முருங்கை இலை தேநீர் அல்லது பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வரலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக முருங்கைக் கொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போக வாய்ப்புள்ளது.