Categories: CINEMA

நான் சொந்த குரலில் டப்பிங் பேசாததற்கு இதுதான் காரணம்… பல ஆண்டு ரகசியத்தைப் பட்டென்று உடைத்த மோகன்!

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.  ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

உச்சத்தில் இருந்த மோகனின் மார்க்கெட் விழுந்ததற்கு அவருக்கு டப்பிங் பேசிய எஸ் என் சுரேந்தர்( விஜய்யின் தாய் மாமா) அவரை பிரிந்ததுதான் காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. இருவருக்கும் இடையே எழுந்த ஈகோ மோதலால் அவர்கள் பிரிந்ததாக பல ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன. இருவருமே மற்றவரைப் பற்றி பொதுவெளியில் பேசமாட்டார்கள்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக நிலவி வந்த சந்தேகத்துக்கு மோகன் இப்போது பதிலளித்துள்ளார். அவரிடம் ஏன் ஆரம்பத்திலேயே நீங்கள் சொந்தக் குரலில் டப்பிங் பேசவில்லை என்று கேட்கப்பட்ட போது “எனக்கு தமிழ் தெரியும் என்றாலும், கர்நாடகா ஸ்லாங்தான் வரும். அது செட்டாகாது. எனக்கு தமிழ் கற்றுக்கொண்டு அதை நானே சரியாக பேசவேண்டுமென்று அப்போது தோன்றவில்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அதற்கு நான் முயற்சி செய்யவில்லை.

எனக்கு ஆரம்பகாலத்தில் எஸ் வி சேகர் கூட டப்பின் பேசியுள்ளார். ஒரு கட்டத்துக்குப் பின்னர் எனக்கு ஒரு தெளிவு கிடைத்ததும் நானே டப்பிங் பேசத் தொடங்கினேன். கலைஞர் அய்யா சொல்லிதான் முதல் முதலாக பாசப்பறவைகள் படத்தில் என் குரலில் டப்பிங் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

22 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

55 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago