தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணி செய்யும் ஊழியர்கள் ஓய்வுபெறும் போது மற்ற அரசு ஊழியர்களைப் போல ஓய்வு பெறும் அன்றே பண பலன்களை வழங்கப்படுவதில்லை. இது நீண்ட காலமாகவே பிரச்சனையில் உள்ளது. அதன் பேரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2025 ஜனவரி மாதம் வரை ஓய்வு பெற்றவர்கள் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின் போது உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இன்று வரை இவர்கள் குடும்பத்திற்கு பணபலன்கள் போய் சேரவில்லை.
நிலுவைத் தொகைகளை வழங்கக்கோரி கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் காரணமாக நிலுவைத் தொகையை உரியோருக்கு வழங்குமாறு அரசு ஆணையிட்டுள்ளது. நிலுவைத் தொகை பரிசீலித்த அரசு ரூ.1,137.97 கோடியை முன்பணமாக வழங்கியுள்ளது. ஓராண்டு காலமாக பண பலன்கள் வராமல் காத்திருந்த போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த உத்தரவு தொழிலாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் அக்கறையை வெளிக்காட்டி உள்ளது. அதற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஓய்வு ஊதியதாரர்கள் மிகவும் மகிழ்ச்சி உடன் உள்ளார்கள்.
