பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் உருவாகியுள்ளது. வருகிற 23ஆம் தேதி வாழை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழை படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார். பொன்வேல், ராகுல் ஆகியோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கலையரசன், நகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் வாழைப்பழத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஸ்கின், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் வாழைப்பழம் குறித்து மிஷ்கின் கூறியதாவது, உண்மையிலேயே ஒரு படத்தை பார்த்தால் ஒரு வாரம் அதனைப் பற்றி யோசித்து அலசி ஆராய்வது தான் என் வேலையா இருக்கும். ஒரு மோசமான படத்தை பார்த்துட்டா ஒரு வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்.
.png?w=640&auto=format%2Ccompress)
ஆனால் வாழை திரைப்படத்தை பார்த்த பிறகு மாரியின் கிராப்ட் பார்த்து நான் ஷாக் ஆயிட்டேன். தமிழ்நாட்டைப் பற்றி நீங்க புரிஞ்சுக்கணும்னா வாழை படத்தை பாக்கணும். நான் ஒரு சோகமான கோமாளி. அதனால நான் கெட்ட வார்த்தைகள் பேசுவதையும் தயவு செஞ்சு பொறுத்துக்கோங்க. எனக்கு தெரிஞ்சு இந்த மேடையில தான் நான் கொஞ்சம் டீசண்டா பேசி இருக்கேன்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு இந்த படத்தை நீங்க பாருங்க. நான் மேடையில பேசுறத பாத்துட்டு தண்ணி அடிச்சிட்டு பேசுறேன்னு சொல்றாங்க.

உண்மையிலேயே நான் தண்ணி அடிச்சு ரொம்ப நாள் ஆயிருச்சு. நான் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்தியாவிலேயே முதலில் சிக்ஸ் பேக் கொண்ட டைரக்டர் நானா தான் இருப்பேன். நம்ம எந்த ரீசனுமே இல்லாம ஒரு தியேட்டருக்கு போய் படம் பார்க்கிறோம். சில படங்கள் மக்கள்ட நல்ல ரீச் ஆகும். சாகுற வரைக்கும் கூட அந்த படத்தை பார்க்கலாம். வாழைப்பழம் ஓடிடியில் வந்த பிறகு உலகத்தில் இருக்கிற எல்லாருமே இந்த படத்தை பார்ப்பாங்க. படத்துல நடிச்சிருக்க எல்லாருமே சூப்பரா நடிச்சிருக்காங்க என பேசியுள்ளார்.

