பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலைந்த கரு…!!! ‘இப்படி நடக்கும்னு  நாங்க  எதிர்பார்க்கல’ சோகத்தில் சுஜா வருணி – சிவகுமார் ஜோடி

By Begam

Published on:

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி ஆன ‘பிக் பாஸ் ஜோடிகள் ‘நிகழ்ச்சி தற்பொழுது தான் முடிவடைந்தது .அதில் கலந்து கொண்ட அனைத்து ஜோடிகளிலும் அமீர் பாவனி  மற்றும் சுஜாவருணி சிவகுமார் ஜோடி ஆரம்பத்தில் இருந்தே மிகவும் சிறப்பாக நடனம் ஆடி வந்தனர்.

   

இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் ஆகியோர் இருந்தனர். இறுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் டைட்டில் வின்னராக அமீர் பாவனி  மற்றும் சுஜா வருணி சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி முடிவடைந்த உடன் சுஜாவருணி சிவகுமார் பேட்டி ஒன்றை அளித்திருந்தனர். அதில் பேய் கடவுள் நடன சுற்றில்  நடனம் ஆடிய போது சுஜா தன்னை அறியாமல் கீழே விழுந்து விட்டார். அப்பொழுதுதான் அவர் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு தெரிய வந்தது.

 

மருத்துவர் எங்களிடம் இரண்டாவது முறையாக சுஜா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார். மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடனத்தில் கலந்து கொண்டார். ஒரு சமயத்தில் சுஜாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே நாங்கள் மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவர் கரு கலைந்து விட்டது என்று கூறினார்.

இதை கேட்ட நான் மனம் உடைந்து விட்டேன்’ என்று சிவகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்