“டெல்லியில் இனி இவர்தான் எல்லாமே”…. முதல்வர் விஜய் வெளியிட்ட அந்த ஒற்றை அரசாணை…. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு பதில்…!

By Nanthini on ஆனி 27, 2026

Spread the love

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான கே.வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவர், எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த கடைசிப் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் விஜய் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து உரிமை கோரியபோது, அவருடன் வெங்கட் நாராயணாவும் உடனிருந்தார். இந்த நியமனத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான ஒரு மிக முக்கியப் பொறுப்பாகும். மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களுடன் தமிழக அரசுக்கான தொடர்பை வலுப்படுத்துவது, முதலமைச்சர் விஜய் டெல்லி செல்லும்போது அவரது முக்கியப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகள் இதில் அடங்கும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்திற்குச் சேர வேண்டிய மத்திய அரசின் நிதி மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் பெறச் செயலாற்றுவதும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது தமிழக எம்பிக்களுக்குத் தேவையான அதிகாரப்பூர்வத் தகவல்களை வழங்குவதும் இந்த பதவியின் முக்கியப் பொறுப்புகளாகும்.

   

இருப்பினும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்கியது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் இந்த நியமனத்திற்குத் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு தமிழகத்தின் உரிமைகளுக்காக டெல்லியில் முழுமையாகப் போராட முடியும் என்ற கேள்வியை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

   

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், வெங்கட் நாராயணா நியமனம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்கி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறிய அவர், சிறப்பு பிரதிநிதிகளை நியமிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்று குறிப்பிட்டார். மேலும், வெங்கட் நாராயணா உட்பட முதல்வர் விஜய்யால் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தமிழ்நாட்டிற்காகவே குரல் கொடுப்பார்கள் என்றும், காவிரி நதி நீர் உள்ளிட்ட மாநிலப் பிரச்சினைகளிலும் தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபட அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.