மாற்றுக்கட்சிகளில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதைக் கண்டு, கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான என். ஆனந்த் தெரிவித்துள்ளார். புதியவர்களின் வருகையால் தங்களுக்குக் கட்சியில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்காது எனக் கூறி, சில பகுதிகளில் உள்கட்சிப் பூசல் மற்றும் அதிருப்தி வெடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்களின் பங்களிப்பு ஒருபோதும் வீண் போகாது என்று அவர் தொண்டர்களுக்குத் தைரியம் அளித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முதல் அனைத்து நிலைகளிலும் கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரமும், தகுதியான முன்னுரிமையும் நிச்சயம் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மாற்றுக்கட்சியினரின் சேர்க்கை என்பது தவெகவை வலுப்படுத்துவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும், ஆரம்பம் முதலே களத்தில் நின்று உழைத்த நிர்வாகிகளின் உரிமைகளும் மரியாதையும் எப்போதும் நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…